"கோவில் அடைப்பு" போராட்டம்: ஆர்எஸ்எஸ் முடிவு
பரேலி (உ.பி.):
ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து, உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள கோவில்களை அடைத்து நாளைபோராட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உள் பிரிவான ஹிந்து ஜாகிரன் மஞ்ச் அமைப்பின் தலைவர் குல்ஷன் ஆனந்த் இதுகுறித்துக்கூறுகையில், பரேலி நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டத்தில் பரேலி மாவட்டத்தில் உள்ள இந்துக் கோவில்களைஒரு நாள் மூடி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி பேரணி நடத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்துக் கோவில் பூசாரிகளையும் நாளைகோவில்களை மூடி ஒத்துழைப்பு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
கடை அடைப்பு லெவலுக்கு கோவில் அடைப்பு போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.