மடத்துடன் தொடர்பில்லை: சொர்ணமால்யா
சென்னை:
காஞ்சி சங்கர மடத்துடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று நடிகை சொர்ணமால்யா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகள் 4 பேர் சங்கர மடத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த நான்குபேரில் சொர்ணமால்யாவும் ஒருவர்.
தனது கணவரை சொர்ணமால்யா திடீரென விவாகரத்து செய்ய முயல, அதை ஏற்க கணவர் மறுக்க ரவிசுப்பிரமணியத்திடம் விஷயத்தைக்கொண்டு சென்றிருக்கிறார் சொர்ணா. அவர் சொர்ணாவின் கணவர் தரப்பை அழைத்து கட்டப் பஞ்சாயத்து நடத்தியுள்ளார்.
மரியாதையாக விவகாரத்துக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என கணவர் தரப்பு மிரட்டி அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து ரவியுடன்லிங்க் ஆனார் சொர்ணமால்யா. பின்னர் ரவி மூலமாக மடத்துடனும் சொர்ணக்காவுக்கு தொடர்பு கிடைத்தது. இவ்வாறு சொர்ணமால்யாகுறித்து இளமை.. புதுமை.. செய்திகள் வருகின்றன.
இதையடுத்து ஜெயேந்திரர் வழக்கை விசாரித்து வரும் தனிப்படை போலீஸார், சொர்ணாமால்யாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந் நிலையில், சொர்ணமால்யா இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டி வருமாறு:
காஞ்சி மடத்துடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னை தொடர்புபடுத்தி வந்த தகவல்களில் துளி கூட உண்மை இல்லை.
முன்றாம் தர வார இதழ் ஒன்றுதான் என்னைப் பற்றி உண்மைக்கு மாறாக இத்தகைய அவதூறு செய்திகளை வெளியிட்டதாக அறிந்தேன்.அந்த பத்திரிக்கை செய்திக்கு நான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. காரணம் என்னவெனில், மறுப்பு தெரிவிக்கக்கூட தகுதி இல்லாதபத்திரிக்கை அது.
அந்த பத்திரிக்கை மீது சிலர் வழக்கு போட சொல்கிறார்கள். ஆனால் அந்த மூன்றாம் தர பத்திரிக்கை மீது வழக்குப்போட்டு என் நேரத்தைவீணடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் விசாரணைக்காக சொர்ணமால்யா போலீசாரிடம் ஆஜராக இருப்பது குறிப்பிடத்தக்கது.