For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளையவரும் விசாரிக்கப்படலாம்: பிரேம்குமார்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

premkumarசங்கரராமன் கொலை வழக்கு விசாரணை முழு வடிவத்தை எட்டிவிட்டதாகவும், விரைவில் விஜயேந்திரரிடமும் விசாரணைநடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

விஜயேந்திரர் மற்றும் அவரது தம்பி ரகு மீது பல பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதும் இதுவரைவிஜயேந்திரரிடம் போலீஸ் விசாரணை நடைபெறவில்லை.

இந் நிலையில் நேற்று ரகுவிடம் விசாரணை தொடங்கியது. காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் அவரிடம் இரவு 10.30 மணி வரைவிசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின் வெளியே வந்த பிரேம்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்த விசாரணை முழு வடிவத்தை அடைந்துவிட்டது. முடிவை நெருங்கி விட்டோம். பல வலுவான ஆதாரங்கள்கிடைத்துவிட்டன.

ரகுவிடம் தொடர்ந்து நாளை மாலை 7 மணிக்கு (அதாவது இன்றும்) விசாரணை நடைபெறும். இது ஒரு மராத்தான் விசாரணை.அதன் இறுதியில்தான் விஜயேந்திரரிடம் விசாரணை நடத்துவதா என்பது குறித்து முடிவு செய்வோம். இப்போதைக்கு அந்தக்கேள்வியே எழவில்லை.

தலைமறைவாக உள்ளவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. புதிதாக 3தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X