For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன் கூட்டாளி வெட்டிக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

வல்லம் (பெரம்பலூர்):

வீரப்பனுக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியை வாங்கிக் கொடுத்த தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த வல்லம் அறிவழகன்அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் சு.இளவரசனின் தமிழர் விடுதலைப் படையைச்சேர்ந்தவர். சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியை வாங்கிக் கொடுத்தவர்.

இவர் மீது ஏராளமான கட்டப் பஞ்சாயத்து, கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளன. ஏற்கனவே சில முறை இவரைக் கொல்லமுயற்சி நடந்தது.

இந் நிலையில் வல்லத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிலர் அறிவழகனை அரிவாள்களால் வெட்டிக் கொன்றுள்ளனர். தமிழர்விடுதலைப் படையின் இன்னொரு கோஷ்டி தான் இவரைப் போட்டுத் தள்ளியதாகத் தெரிகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: நல்லகண்ணு

இந் நிலையில் வீரப்பனாலும், அதிரடிப்படையினரின் நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கு தமிழக அரசுநிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பனின் நடவடிக்கைகளாலும், அதிரடிப்படையினரின்நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கு தமிழக அரசு உரிய நவாரணம் வழங்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நவாரணம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும்வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X