For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கதிரவன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

செங்கல்பட்டு:

Kathiravan சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கதிரவன், குருவி ரவி உட்பட 9 பேரின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டுசெசன்சு நீதிமன்றம் வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திர் உட்பட இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் கதிரவன், குருவிரவி, மீனாட்சி சுந்தரம், பழனி, ரவி, தில் பாண்டியன், ஆறுமுகம், சதீஷ், சேகர், செந்தில்குமார் ஆகிய 9 பேர் தங்களை ஜாமீனில்விடக் கோரி செங்கல்பட்டு செசன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு இன்று நீதிபதி அக்பர் அலி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் 9 பேரையும்ஜாமீனில் விட கோரி வாதாடினார்கள்.

ஆனால் அதை நீதிபதி அக்பர் அலி ஏற்கவில்லை. அவர்களை ஜாமீனில் விடுவித்தால், வழக்கு விசாரணை பாதிக்கும். மேலும்குற்றவாளிகள் தலைமறைவாகி விட வாய்ப்புள்ளது என்று கூறினார்.

பின்னர் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X