வீரப்பன்: விஜயக்குமாரிடம் விசாரணை
தர்மபுரி:
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தர்மபுரி ஆர்.டி.ஓ. முன்பு அதிரடிப்படை டிஜிபி விஜயக்குமார் இன்று ஆஜராகிவிளக்கமளித்தார்.
வீரப்பனும், அவனது கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கெளடா, சேதுமணி ஆகியோரும் கடந்த மாதம் 18ம் தேதிதர்மபுரி அருகே உள்ள பாப்பாரப்பட்டி வனப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர்
இந்தக் கொலை தொடர்பாக தர்மபுரி மாவட்ட கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) சிவப்பிரகாசம் விசாரணை நடத்தி வருகிறார்.வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் வீரப்பனால் பாதிக்கப்பட்டோர் தங்களது தரப்புவாதங்களை ஆர்.டி.ஓ.விடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வீரப்பனை சுட்டு வீழ்த்திய தமிழக அதிரடிப்படையினரிடம் விசாரணை தொடங்கியது. டிஐஜிக்கள் செந்தாமரைக்கண்ணன், சண்முகவேல் ஆகியோர் கடந்த மாதம் 25ம் தேதி ஆர்.டி.ஓ. முன்பு ஆஜராகி வாக்குமூலம்அளித்தனர்.
இந் நிலையில் இன்று விஜயகுமார் ஆஜராகி ஆர்.டி.ஒ. விசாரணைக்கு பதில் அளித்தார்.