இந்திய- இலங்கை கடலோர காவல் படை கூட்டு பயிற்சி
கொழும்பு:
இந்தியா, இலங்கை கடலோர காவல் படைகள் இன்று கூட்டுப் பயிற்சி மேற்கொண்டன.
கொழும்பு கடற்கரையில் நடந்த இந்த முதல் கூட்டுப் பயிற்சியை இலங்கை பாதுகாப்பு அமைச்சர், இரு நாடுகளின் கடலோர காவல் படைதலைவர்கள் பார்வையிட்டனர்.
இதில் இந்திய கடலோர காவல் படை சார்பில் சாரங் மற்றும் துர்காபாய் தேஷ்முக் ஆகிய கப்பல்களும், ஒரு ஹெலிகாப்டர், ஒரு விமானம்மற்றும் 200 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியைப் பார்வையிட வைஸ் அட்மிரல் ஏ.கே.சிங் கொழும்பு சென்றார்.
இலங்கை கடற்படையின் சார்பில் 3 கப்பல்கள், இரண்டு விமானங்களுடன் 450 வீரர்கள் கலந்து கொண்டனர்.
கடத்தல் தடுப்பு, விபத்து மீட்பு, மாசுக் கட்டுப்பாடு, தேடுதல் வேட்டை ஆகிய கூட்டுப் பயிற்சிகள் நடத்தப்பட்டது. பின்னர் இலங்கைஅதிகாரிகளுடன் இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
முதலில் இந்த கூட்டுப் பயிற்சிக்கு பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் உள்ளூர்பத்திரிக்கையாளர்கள் சிலர் மட்டும் கப்பல் மூலமாக பயிற்சி நடந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த பயிற்சி தவிர, கடல் சார்ந்த சட்ட அமலாக்க அதிகாரிகளுடனான கலந்துரையாடலிலும் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள்கலந்து கொள்கின்றனர்.