வேலூர்: 6 பெண் பொடா கைதிகள் உண்ணாவிரதம்
வேலூர்:
வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பெண் பொடா கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதில் ஒரு பெண்உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காட்டுப் பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 நக்சலைட்டுகளை போலீஸார்ஆயுதங்களுடன் பிடித்தனர். ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நக்சலைட்டுகளில் 6 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் 6 பேரும் வேலூரில் உள்ள பெண்கள் சிறைச் சாலையில்அடைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீது தொடரப்பட்டுள்ள பொடா வழக்கை வாபஸ் பெறக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த6 பெண்களும் பல்வேறு வகையான போராட்டங்களை சிறைக்குள்ளேயே நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் நடந்து வரும் பொடா மறு ஆய்வுக் குழு விசாரணைக்கு 6 பெண்கள் உள்பட 26நக்சலைட்டுகளும் கொண்டுவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணை முடிவில் 6 பேரும் மகளிர் காவல் நலையத்தில் அடைக்கப்பட்டனர். இந் நிலையில் இன்று காலை முதல் 6 பெண்களில் 5 பேர்உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர். இவர்களில் சத்தியமேரி என்பவரின் உடல் நிலை மோசமடைந்தது.
இதையடுத்து அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளா.