For Daily Alerts
Just In
ஜெயேந்திரரை சந்தித்த முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கராச்சாரியாரை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணாச்சலம் இன்று சந்தித்தார்.
காலை 11.45க்குச் சென்ற அவர் 10 நிமிடங்கள் ஜெயேந்திரரைச் சந்தித்தார். தனக்கு மூட்டு வலி இருப்பதால் சிறை வளாகத்தின் உள்ளேவரை காரிலேயே சென்றார் அருணாச்சலம்.
சங்கராச்சாரியாரை சந்தித்த பின், காரின் கறுப்புக் கண்ணாடிகள் ஏற்றப்பட்ட அந்தக் காரிலேயே ஏறி வேகமாக வெளியேறிவிட்டார்முன்னாள் நீதிபதி.
கொலை வழக்கில் சிறையில் இருக்கும் சங்கராச்சாரியாரை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
chennai tamil nadu news operation raghu swarnamalya kanchi sankarachariyar appu sexual assault appendicitis
Story first published: Tuesday, December 21, 2004, 5:30 [IST]