சென்னை அருகே ரவி சுப்ரமணியமும் சரண்?
சென்னை:
அப்புவைத் தொடர்ந்து காண்டிராக்டர் ரவி சுப்ரமணியமும் சென்னை அருகே படாளத்தில் போலீஸாடரிம் நேற்றிரவில் சரண்அடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை போலீசார் உறுதி செய்ய மறுக்கின்றனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகள், கொலைசெய்த கூலிப் படையினர் உள்ளிட்ட 21 பேர் இதுவரை போலீஸ் பிடியில்சிக்கியுள்ளனர். கூலிப் படையிடம் பண பட்டுவாடா செய்த முக்கிய குற்றவாளியான சங்கர மட காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம் மட்டும்இன்னும் சிக்காமல் தலைமறைவாக உள்ளார்.
இந் நிலையில் கூலிக்கு கொலையாளிகளை அனுப்பிய அப்பு ஞாயிற்றுக்கிழமை சித்தூரில் போலீஸாடம் சரணடைந்தார். அவரை நேற்றுகாஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார் 3 நாள் காவலில் எடுத்துள்ளனர்.
இந் நிலையில் தலைமறைவாக உள்ள ரவிசுப்ரமணியமும் நேற்றிரவு சரணடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை அருகே படாளம்என்ற இடத்தில் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம் ரவி சரணடைந்ததாகக் தெரிகிறது.
இதையடுத்து ரவியை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போலீசார் காஞ்சிபுரம் சென்றதாகவும், அங்கு எஸ்.பி. பிரேம்குமாரிடம் ரவிஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.