For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எண்ணூர் எரிவாயு மையம்: மலேசியாவுக்கு அழைப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழ்நாட்டின் எண்ணூரில் இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் அமைக்கும் பணியில் இந்தியன் ஆயில் கார்போரெசன் நிறுவனத்துடன்கூட்டு சேர வருமாறு மலேசியாவின் பெட்ரோனாஸ் நிறுவனத்துக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் அப்துல்லா அஹமத் படாவியைச் சந்தித்திப் பேசிய பின் நிருபர்களிடம்பேசிய அய்யர்,

பெட்ரோலியத்துறையில் இந்தியாவும் மலேசியாவும் இணைந்து செயல்பட முடியும். ஈரான் நாட்டில் இயற்கை எரிவாயுவை வெளியில்எடுக்கும் மாபெரும் திட்டத்திலும், ரஷ்யா மற்றும் சூடானில் எண்ணெய் வளம் மிக்க பகுதிகளை குத்தகைக்கு எடுப்பதிலும் இந்தியாவும்மலேசியாவும் இணைந்து செயல்படலாம் என்பதை மலேசிய பிரதமரிடம் தெரிவித்தேன்.

பெட்ரோனாசும் இந்தியன் ஆயில் கார்பொரேசனும் கூட்டாக ஆந்திராவில் காக்கிநாடா பகுதியில் இயற்கை எரிவாயுவை வெளியில்எடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

அதே போல சென்னையில் எண்ணூர் அருகே அமைக்கப்படும் இயற்கை எரிவாயு இறக்குமதி முனையப் பணிகளிலும் மலேசியாவின்பெட்ரோனாஸ் நிறுவனம் முதலீடு செய்யலாம் என்றார் அய்யர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X