சன் டிவியின் என்ஆர்ஐ சானல்
சென்னை:
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக ஒரு தனி தொலைக்காட்சி அலைவரிசையை தொடங்க சன் டிவி குழுமம் திட்டமிட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள ஆஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து இந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சன் டிவி நிகழ்ச்சிகளைத் தயாரித்துவழங்கும். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுஒளிபரப்பாகும்.
மொத்தம் 2 அலைவரிசைகளைத் தொடங்க சன் டிவி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 112.50 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.டிடிஎச் எனப்படும் வீடுகளுக்கு நேரடியாக ஒளிபரப்பாகும் வகையில் இந்த இரு அலைவரிசைகளும் இருக்கும்.
மலேசியா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் இதன் ஒளிபரப்பை காண முடியும். இதுதவிர பெங்காலி மக்களைக் குறி வைத்துஇந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தெரியும் வகையிலான பெங்காலி மொழி அலைவரிசை ஒன்றையும் சன் டிவி விரைவில்தொடங்கவுள்ளது.