For Daily Alerts
Just In
சங்கரராமன் வழக்கு: கதிரவன் ஜாமீன் மனு தள்ளுபடி
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள கதிரவன், சின்னா உள்ளிட்ட 10 பேரின் ஜாமீன் மனுக்கள் இன்று செங்கல்பட்டு முதன்மைஅமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கூலிப் படையைச் சேர்ந்த கதிரவன், சின்னா, சில்வஸ்டர் உள்ளிட்ட 10 பேரின்ஜாமீன் மனுக்களும் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து 10 பேரும் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அந்த மனுக்கள் இன்று நீதிபதிஜெயபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
அப்போது 10 பேருக்கும் ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர்களது ஜாமீன்மனுக்களை நீதிபதி ஜெயபாலன் தள்ளுபடி செய்தார்.
Story first published: Thursday, December 23, 2004, 5:30 [IST]