சங்கரா கல்லூரி ஆசிரியரிடம் 5 மணி நேர விசாரணை
காஞ்சிபுரம்:
காஞ்சி மடத்தின் சார்பில் நடத்தப்படும் ஏனாத்தூர் ஸ்ரீசங்கரா கலைக் கல்லூரி ஆசிரியர் வெங்கடகிருஷ்ணனனிடம் சுமார் 5 மணி நேரம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூர் ஸ்ரீசங்கரா கலைக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வரும்வெங்கடகிருஷ்ணன் காட்டுப் பங்களாவிற்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் சுமார் 5 மணி நேரம் தீவிரவிசாரணை நடந்தது.
மடம் சார்பில் நடத்தப்படும் காமதூத் மகளிர் விடுதி குறித்து அவரிடம் போலீஸார் துருவித் துருவி விசாரணைநடத்தியுள்ளனர். மாலையில்தான் அவர் விசாரணை முடிந்து வெளியே அனுப்பப்பட்டார்.
இதேபோல, சங்கர மட ஸ்ரீகார்யம் நீலகண்ட அய்யரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆடிட்டர்ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கு தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, கடிகாஸ்ரமம் அறக்கட்டளை அலுவலகத்தில் டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையில் திடீர் சோதனைநடத்தப்பட்டது. அப்போது பல ஆவணங்களை போலீஸார் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.