For Daily Alerts
Just In
ஜன. 3வது வாரத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் அடுத்த மாதம் 3வது வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றுஎஸ்.பி. பிரேம்குமார் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகள்அனைவரும் பிடிபட்டுள்ளனர். ஒருவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரும் விரைவில் பிடிபடுவார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அனேகமாக ஜனவரி 3வது வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்றார் அவர்.
Story first published: Saturday, December 25, 2004, 5:30 [IST]