எழுத்தாளர் சிவசங்கரியிடம் போலீஸ் விசாரணை
சென்னை:
பிரபல எழுத்தாளர் சிவசங்கரியிடம் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் இன்று சென்னையில் விசாரணை நடத்தினர்.
பிரபல எழுத்தாளர் சிவசங்கரிக்கும், சங்கர மடத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந் நிலையில் இன்று காலை சென்னை அடையாறில்உள்ள சிவசங்கரியின் வீட்டுக்கு தனிப்படை போலீஸ் குழு சென்றது.
சிவசங்கரியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து அப்போது சர்ச்சை எழுந்தது.
இந் நிலையில் இன்று சிவசங்கரியை விசாரித்த போலீசார், அவரது தந்தையின் மரணத்திற்கும், சங்கர மடத்திற்கும் தொடர்பு உள்ளதாஎன்றரீதியில் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
ஆனால் தனது தந்தையின் மரணத்தில் எந்தவித சர்ச்சையும் இல்லை, அவரது மரணம் இயற்கையானதுதான் என்று போலீஸாரிடம் கூறிவிட்டார் சிவசங்கரி.
தன்னுடன் தவறாக நடந்து கொள்ள முயன்றால் ஜெயேந்திரர் என பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் குற்றம் சாட்டியிருந்தார்.இப்போது தமிழகத்தின் இன்னொரு பெண் எழுத்தாளரான சிவசங்கரியும் சங்கர மட விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.