For Daily Alerts
Just In
சென்னை கடலில் மிதந்து வந்த 15 உடல்கள்
சென்னை:
சென்னை துறைமுகம் பகுதியில் கடலில் மிதந்து வந்த 15 உடல்களை போலீஸார் மீட்டனர்.
சுனாமி தாக்குதலால் பாதிப்புக்குள்ளான சென்னை நகரில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டவர்களின் உடல்கள் தற்போது படிப்படியாக கரையொதுங்கி வருகின்றன.
துறைமுகம் பகுதியில் மட்டும் 15 உடல்கள் நேற்று மிதந்து வந்தன. இந்த உடல்களை அடையாளும் கண்டறியபோலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை நகரில் உயிரிழப்பு 200யைத் தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, December 29, 2004, 5:30 [IST]