For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 நாட்களாய் தாயின் பிணத்தருகே இருந்த குழந்தை

By Staff
Google Oneindia Tamil News

குளச்சல்:

The scene in Kulachal

குளச்சலில் கடல் கொந்தளிப்பில் பலியான தாயாரின் உடலருகே அழுதபடி அமர்ந்திருந்த 2 வயது குழந்தை மீட்கப்பட்டது. கடந்த மூன்றுநாட்களாக உணவு, தண்ணீர் கூட இல்லாமல் திறந்த வெளியில் தாயாரின் பிணத்தருகே இந்தக் குழந்தை இருந்துள்ளது.

இதேபோல் குளச்சலில் சடலங்களை மீட்டு அடக்கம் செய்யும் பணியில் போலீஸாரும், பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒருபெண்ணின் சடலத்தின் அருகே 2 வயதுக் குழந்தை ஒன்று உயிருடன் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது.

கடந்த 3 நாட்களாக வெட்ட வெளியில், கடும் குளிரில், உணவு, தண்ணீர் கூட இல்லாமல் இருந்தும் அக்குழந்தை உயிர் பிழைத்திருக்கிறது.அந்தக் குழந்தையை மீட்ட போலீசார் உடனடியாக நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அக் குழந்தைக்கு அருகில் இருந்தது அதன் தாயார் என்றும் அவரது பெயர் வசந்தி என்பதும் தெரியவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X