For Daily Alerts
Just In
நிவாரண பணிக்கு உதவும் ஆஸி. கிரிக்கெட் அணி
மெல்பேர்ன்:
பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் கிடைத்த பரிசுப் பணத்தை கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டவர்களின்நிவாரணப் பணிக்கு வழங்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி முன்வந்துள்ளது.
மெல்பேர்ன் நகரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும்கைப்பற்றியது.
இன்னும் ஒரு டெஸ்ட் எஞ்சியிருக்கும் நிலையில், இந்த தொடர் வெற்றி மூலம் கிடைக்கும் சுமார் 13,000 அமெரிக்க டாலர் பணத்தினைகடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணப் பணிக்கு வழங்குவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலைவர் ரிக்கிபாண்டிங் அறிவித்துள்ளார்.
Comments
Story first published: Wednesday, December 29, 2004, 5:30 [IST]