For Daily Alerts
Just In
சங்கரராமன்: ரிலையன்ஸ் இயக்குனருக்கு சம்மன்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ரிலையன்ஸ் தொழில் நிறுவன இயக்குனர்களில் ஒருவரான பாலசுப்ரமணியனுக்கு காஞ்சிபுரம்தனிப்படை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சங்கர மடத்திற்கும், பாலசுப்ரமணியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சங்கரராமன் கொலைவழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீஸார் முடிவு செய்தனர்.
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தனது கடுமையான பணிகள் காரணமாக கால அவகாசம் கொடுக்குமாறு பாலசுப்ரமணியம் தனிப்படை போலீஸ் அதிகாரிகளிடம்கோரிக்கை விடுத்துள்ளார். அதை தனிப்படை அதிகாகள் ஏற்றுக் கொண்டு கால அவகாசம் கொடுத்துள்ளனர்.
Comments
Story first published: Thursday, December 30, 2004, 5:30 [IST]