For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏமாற்றத்துடன் கரை திரும்பிய மீனவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

A Fishermen looking his destructed house

சுனாமி அலை தாக்குதலுக்குப் பின் முதன்முறையாக மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 2,500 பேரும் போதிய மீன்கள்பிடிபடாததால் ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர்.

ராமேஸ்வரம் பகுதியில் சுனாமி அலை பாதிப்பு இல்லாவிட்டாலும் தமிழகக் கடலோரப் பகுதிகள் அனைத்திலுமே மீன்பிடி பணிகளைமீனவர்கள் நிறுத்தி வைத்திருந்தனர்.

இந் நிலையில் நேற்று அதிகாலை நாகப்பட்டிணம் மீனவர்களும், ராமேஸ்வரம் மீனவர்களும் கடலுக்குப் புறப்பட்டனர். ராமேஸ்வரத்தைச்சேர்ந்த 2,500 மீனவர்கள் 600 படகுகளில் புறப்பட்டனர்.

மாலையில் திரும்பி வந்த அந்த மீனவர்கள் முகத்தில் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. ஒரு வாரத்துக்குப் பின் கடலுக்குச் சென்றோம். வழக்கமாகஇந்த இடைவெளியில் மீன்களின் அடர்த்தி அதிகரித்திருக்கும். ஆனால், போதிய மீன்கள் கிடைக்கவில்லை என்கின்றனர்.

அதே நேரத்தில் கடலில் எந்த மாற்றமும் இல்லை, அலைகள் வழக்கமாகவே உள்ளன. போதிய அளவில் மீன் கிடைக்காவிட்டாலும் மீண்டும்கடலுக்குச் சென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X