For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடும்பத்தினர் 32 பேரை தேடும் மருத்துவமனை ஊழியர்

By Staff
Google Oneindia Tamil News

போர்ட்பிளேயர்:

The scene in Andamans

சுனாமி அலை தாக்குதலில் காணாமல் போன தனது குடும்பத்தினர் 32 பேரைத் தேடிவரும் அதே வேளையில், பாதிக்கப்பட்டவர்களுக்குத்தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார் கார் நிக்கோபார் மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர்.

கார் நிக்கோபார் பகுதியில் உள்ள ஜே.பி. பந்த் மருத்துவமனையில் கிளர்க்காகப் பணிபுரிபவர் அப்துல் குத்தூஸ். கடல் கொந்தளிப்பு நிகழ்ந்ததினத்தன்று இவர் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

அன்றைய தினம் சுனாமி அலைகள் தாக்கியதில் இவரது மனைவி, குழந்தைகள், இரண்டு விதவை சகோதரிகள், அவர்களது குழந்தைகள்,இரண்டு விதவை மருமகள்கள் மற்றும் அவர்களது குழந்தைகள என 32 பேரைக் காணவில்லை.

அவர்களையும் அவர்களது உடல்களையும் ஒரு பக்கம் தேடியலைந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சைஅளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார் குத்தூஸ்.

அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான குவிந்துள்ளதால் மருத்துவமனையில் வேலைப் பளு அதிகமாகி விட்டது. மேலும்நாங்கள் இருந்த பகுதிகளைத் தொடர்பு கொள்ள எந்த வசதியும் இல்லை.

எனது குடும்பத்தினரைத் தேடும்படி அரசு நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரி வருகிறேன். இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. அனைத்துமுகாம்களிலும் தேடிப் பார்த்தேன். அங்கு எனது குடும்பத்தினர் யாரும் இல்லை.

வேறு தீவுகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை சுமந்து கொண்டு மீட்பு விமானங்கள் வரும்போதெல்லாம் விரைந்து சென்று பார்ப்பேன்.இதுவரை எனது குடும்பத்தினரில் ஒருவர் கூட வரவில்லை.

நாங்கள் தங்கியிருந்தது கடலுக்கு அருகாமையில்தான். இந்தத் தீவில் உயர்ந்த மேட்டுப்பகுதிகள் எதுவும் இல்லாததால் பாதிப்பு அதிகமாகிவிட்டது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X