For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் நிவாரண பணியில் இவாண்டர் ஹோலிபீல்ட்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Rescue operation

முன்னாள் உலக குத்துச் சண்டை சாம்பியனான இவாண்டர் ஹோலிபீல்ட் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய குழு சுனாமிபாதித்த தமிழக பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக சென்னை வந்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து தனி விமானம் மூலம் இவர்கள் சென்னை வந்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபிரச்சாரகர் கே.ஏ.பால் இவர்களை அழைத்து வந்துள்ளார்.

இக் குழுவில் இடம் பெற்றுள்ள ஹோலிபீல்ட், முன்னாள் உலக குத்துச்சண்டைச் சாம்பியன் ஆவார். புகழ் பெற்றகுத்துச் சண்டை வீரர் மைக் டைசனுடன் மோதி வெற்றி பெற்று சாதனை படைத்தவர்.

நிருபர்களிடம் பேசிய ஹோலிபீல்ட், முதலில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறப் போகிறோம். அதன்பின்னர் நிவாரணப் பணிகளில் ஈடுபடவுள்ளோம். அதைத் தொடர்ந்து நிதி திரட்டுவது உள்ளிட்ட பணிகளில்ஈடுபடப் போகிறோம் என்றார்.

முதல்வர் ஜெயலலிதாவை ஹோலிபீல்ட் இன்று சந்திக்கிறார். இதன் பின்னர் அவரது குழு கடலூர், நாகை ஆகியமாவட்டங்களுக்கு செல்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X