For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனாதையான குழந்தைகளுக்கு காப்பகங்கள் அமைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Childrens lost parents to tsunami in TN

சுனாமி அலை தாக்குதலால் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிக்க நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரிமாவட்டங்களில் அரசு சார்பில் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடல் கொந்தளிப்பில் பெற்றோரை இழந்த குழந்தைகளை அரசே தத்து எடுத்து வளர்க்கும் என்றும், அவர்களது பெயரில் ரூ.5லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆதரவற்ற குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு, குழந்தைகள்காப்பகம் தொடங்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் என்ற கிராமத்தில் அன்னை சத்யா என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம்தொடங்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 50 குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடங்கப்பட்ட காப்பகங்களில் தலா 25 குழந்தைகள் உள்ளனர். வருவாய்த் துறைஅதிகாரிகள் தொடர்ந்து கணக்கெடுத்து வருவதால், அரசு தத்து எடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் உயரும என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குழந்தைகளின் அனைத்து செலவுகளையும் அரசு ஏற்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X