For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிவாரணங்களை பறிக்கும் போலி மீனவர்கள்!

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்:

The scene in Coastal area

சுனாமியால் சிறிதளவும் பாதிக்கப்படாத பலரும் தங்களை பாதிக்கப்பட்ட மீனவர்கள் என்று கூறிக் கொண்டு நிவாரண உதவிகளைக்கேட்பதால் ராமநாதபுரம் மாவட்ட அரசு அதிகாரிகள் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த முறைகேட்டை முன்னின்று நடத்துவதே உள்ளூர் கரை வேட்டிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நிவாரண உதவி கோரி வருவோரில் பலரும் போலியான மீனவர்கள் என்றும், இவர்களில் யாரும் சுனாமியால் பாதிக்கப்படவில்லைஎன்றும் தெரிகிறது.

உள்ளூர் அரசியல்வாதிகள்தான் இந்த போலியான நபர்களை பாதிக்கப்பட்ட மக்களாக நடிக்க வைத்து அரசின் நிவாரண உதவிகளைப்பெற முயல்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் செல்லமுத்துவுக்குத் தகவல் போயுள்ளது.

இதையடுத்து மீனவர்களின் அடையாளங்களை மிகக் கவனுடன் பரிசோதித்த பின்னரே நிவாரண உதவிகளை வழங்குமாறுஅதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண உதவி போய்ச்சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X