For Daily Alerts
Just In
சுனாமி: மனநல டாக்டர்களுக்கு பயிற்சி முகாம்
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவது தொடர்பாக, மனநல மருத்துவர்களுக்கான பயிற்சிமுகாம் சென்னையில் நடத்தப்பட்டது.
தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் உள்ளமனநல மருத்துவப் பிரிவு இந்த பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த முகாமை தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் சுந்தரத்தேவன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மனநலமருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்டு அதிர்ச்சிக்குள்ளாகி, மன உளைச்சல் அடைந்தவர்களுக்கு எப்படிப்பட்ட மனநல ஆலோசனைகளைவழங்குவது என்பது குறித்து இந்த முகாமில் மருத்துவ நிபுணர்கள் விவாதித்தனர்.
Story first published: Sunday, January 9, 2005, 5:30 [IST]