சுனாமி கிரிக்கெட்: உலக லெவன் அணி வெற்றி
மெல்பர்ன்:
சுனாமியால் பதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட்போட்டியில் உலக லெவன் அணி, ஆசிய லெவன் அணியை 112 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
சுனாமி பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதி திரட்டித் தருவதற்காக இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஐ.சி.சி முடிவு செய்தது.அதன்படி முதல் போட்டி இன்று மெல்போர்ன் நகரில் நடந்தது.
டாஸ் வென்ற உலக லெவன் அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். ஆட்டம் துவங்கும் முன்பு சுனாமியால்இறந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆசிய லெவன் அணிக்கு கங்குலி கேப்டனாக இருக்கிறார்.
உலக லெவன் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்தது. ரிக்கி பாண்டிங் 115 ரன்களும்,கெய்ர்ன்ஸ் 69 ரன்களும், லாரா 52 ரன்களும் எடுத்தனர். ஆசிய லெவன் அணி சார்பில் முரளிதரன் 3 விக்கெட்களையும், ஜாகீர்கான் இருவிக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய ஆசிய லெவன் அணி 39.2 ஓவர்களுக்கு 232 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் உலகலெவன் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசிய லெவன் அணியில் டிராவிட் 75 ரன்களும், ஷேவாக் 232 ரன்களும் எடுத்தனர். உலக லெவன் அணி சார்பில் வெட்டோரி 3விக்கெட்களையும், வார்னே 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.