தமிழ் பெண் குழந்தையை தத்தெடுக்கும் சந்திரிகா
கொழும்பு:
சுனாமி அலையால் பெற்றோரை இழந்த ஒரு தமிழ் பெண் குழந்தையைத் தத்தெடுக்கப் போவதாக இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காதெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுனாமி அலைத் தாக்குதலில் 30,000க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்குப்பகுதிகளில்தான் அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த பல தொண்டு நிறுவனங்கள்ஈடுபட்டுள்ளன.
நிவாரணப் பணிகளை முடுக்கி விடுவது தொடர்பாக அதிபர் சந்திரிகா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்சந்திரிகா பேசும்போது, கடல் கொந்தளிப்பில் பெற்றோரை இழந்து வாடும் ஒரு தமிழ் பெண் குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன்என்றார்.
புலிகள் கண்டனம்:
இந் நிலையில் சந்திரிகாவின் இந்த அறிவிப்பு வெறும் அரசியல் ஸ்டன்ட் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் இலங்கை வந்தபோது தமிழர் பகுதிகளுக்கு வரவிடாமல் தடுத்தார். இதனால் சர்வதேசஅளவில் சந்திரிகாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதை சமாளிக்கவே இந்த யுக்தியைக் கையாள்கிறார்.
தமிழர் பகுதிகளில் இலங்கை அரசு தேவையான நிவாரணப் பணிகளை செய்யவில்லை. இப்போது தமிழர் பெண்ணை தத்தெடுப்பதன்மூலம் தமிழ் மக்களை அவரால் சமாதானப்படுத்திவிட முடியாது என்றார்.