For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விசாரணைக்கு ஆஜராக விஎச்பி தலைவர் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Shankarramanசங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணைக்கு அழைத்தை ஏற்க விஸ்வ இந்துபரிஷத் அமைப்பின் சர்வதேசத் துணைத் தலைவர் வேதாந்தம் மறுத்துவிட்டார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக புதன்கிழமை காலை 7.30 மணிக்கு காஞ்சிபுரம் தனிப்படை போலீஸ்முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு எனக்கு சம்மன் வந்தது.

ஆனால் சட்ட விதிகளுக்குட்பட்டு அந்த சம்மன் இல்லை என்பதால் அதை நான் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டேன். விசாரணைக்கும் ஆஜராக முடியாது என்றும் கூறி விட்டேன் என்றார்.

ரகு காவல் நீட்டிப்பு:

இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரரின் தம்பி ரகு உள்ளிட்ட 9 பேரின் சிறைக் காவல்ஜனவரி 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரகு, மாட்டு பாஸ்கர், சில்வஸ்டர் உள்ளிட்ட 9 பேரின் சிறைக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்றத்தில் 9 பேரும் ஆஜர் செய்யப்பட்டனர்.

அவர்களின் சிறைக் காவலை 25ம் தேதி வரைக்கும் நீட்டித்து நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார்.நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட ரகுவுக்கு, சங்கர மடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பிரசாரம்வழங்கப்பட்டது.

மடத்தின் ஆதரவாளர்களும், சில நிர்வாகிகளும் ரகுவை சந்தித்துப் பேசினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X