For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜோதிட திலகம் கே.பார்த்தசாரதி தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தின் பிரபல முன்னணி ஜோதிடர் கே.பார்த்தசாரதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வரும் 21ம் தேதியுடன் தனது வாழ்க்கை முடிந்து மரணம் ஏற்பட இருந்ததாகவும், இதனால் இப்போதே தற்கொலை செய்து கொண்டதாகவும்பார்த்தசாரதி கடிதம் எழுதி வைத்துள்ளார்.

முன்னணி வார இதழ்கள், நாளிதழ்களில் வார, மாத ராசி பலன்களை எழுதி வந்த பார்த்தசாரதியிடம் விவிஐபிக்கள், நடிகை, நடிகர்கள்,தொழிலதிபர்கள் ஜோதிடம் பார்த்துச் செல்வது வழக்கம்.

இவரது சென்னை வீட்டில் எப்போதும் விஐபிக்கள் நடமாட்டமாகவே இருக்கும்.

இந் நிலையில் நேற்று காலை 5 மணிக்கு அவர் தனது வீட்டிலேயே மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த அறையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு கடிதம் சிக்கியது. அதில் ஜோதிட திலகம் பார்த்தசாரதி எழுதியிருப்பதாவது:

எனக்கு வரும் 21ம் தேதி மரணம் ஏற்படவுள்ளது. இது எனக்குத் தெரியும். இந் நிலையில் இன்று காலை 4.30மணிக்கு எனக்கு மாரடைப்புஏற்பட்டது. நெஞ்சு வலியால் துடித்தேன். ஒரு கையால் மார்பைப் பிடித்தபடி இந்த அறைக்கு வந்தேன்.

எனக்கு மரணம் சம்பவிக்க 4 நாட்களே உள்ளதால் எனது வஸ்திரத்தால் தூக்கு போட்டு தற்கொலை செய்யப் போகிறேன். இது என்னுடையதிடீர் முடிவு தான். என் மனைவி, மகள், மருமகனுக்கு எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார் பார்த்தசாரதி. போஸ்ட் மார்ட்டத்துக்குப் பின் அவரது உடல் பெசன்ட் நகர்இடுபாட்டில் தகனம் செய்யப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X