For Quick Alerts
For Daily Alerts
Just In
சுனாமி நிவாரணம்: ஜெவிடம் ரூ. 107 கோடி குவிந்தது
சென்னை:
சுனாமி நிவாரணத்திற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 107 கோடி சேர்ந்துள்ளது.
சுனாமி பேரழிவைத் தொடர்ந்து நல்ல மனம் படைத்தோர் நிவாரணத்திற்காக பெருமளவில் உதவ வேண்டும் என்று ஜெயலலிதாகோரிக்கை விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் முதல்வர் ஜெயலலிதாவிடம் நிதியளித்து வருகின்றனர். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசுஊழியர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், வெளி மாநில முதல்வர்கள், பொது மக்கள், தனியார் நிறுவனங்கள், வியாபாரிகள் எனபல தரப்பினரும் தொடர்ந்து நிதியளித்து வருகின்றனர்.
இதுவரை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 107.66 கோடி நதி சேர்ந்துள்ளதாக இன்று வெளியிடப்பட்ட தமிழக அரசின்செய்திக் குறிப்பு தெவிக்கிறது. இன்று மட்டும் 32 பேர் ரூ. 9.19 கோடி நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினர்.
Comments
Story first published: Wednesday, January 19, 2005, 5:30 [IST]