ஜெ. கொடுத்த கிரீடம்: தேவஸ்தானம் புது முடிவு
குருவாயூர்:
முதல்வர் ஜெயலலிதா கொடுத்த தங்க கிரீடத்தை வருமான வரி அதிகாரிகளின் ஆய்வுக்கு விடுவது தொடர்பாக கேரள மாநில அரசின்கருத்தை கேட்டுள்ளது குருவாயூர் தேவஸ்தானம்.
குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த தங்கக் கிரீடத்தை பரிசோதிக்க வேண்டும் என்று சென்னை வருமானவரித்துறை அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் சோதனை நடத்த குருவாயூர் தேவஸ்தானஇடைக்கால நிர்வாகக் குழு அனுமதி அளித்தது.
ஆனால் குருவாயூர் கிருஷ்ணன் கோயில் பக்தர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டவற்றைசோதனை செய்தால் அது கோயில் பாரம்பரியத்தைக் கெடுத்து விடும் என்று அவர்கள் குரல் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து வருமான வரி ஆய்வுக்கு திடீரென அனுமதி மறுத்து விட்டது தேவஸ்தானம். இந் நிலையில், இந்தப் பிரச்சினைதொடர்பாக கேரள மாநில அரசின் கருத்தை அறிய தேவஸ்தானத்தின் இடைக்கால நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
தேவஸ்தானத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தேவஸ்தான ஆணையர் மோகன்தாஸ்கூறுகையில், அரசின் கருத்தை அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு வருமான வரித்துறை அதிகாரிகளை அனுமதிப்பதா,வேண்டாமா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றார் அவர்.