சுனாமி: நன்கொடையாளர்களுக்கு குமரி கலெக்டர் கோரிக்கை
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படும் பொருட்களைக் குறிப்பிட்டு அதற்கேற்பஉதவுவமாறு நன்கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுனில் பாலிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து ரமேஷ்சந்த் மீனா விடுவிக்கப்பட்டததையடுத்து புதிய ஆட்சியராக சுனில் பாலிவால்பொறுப்பேற்றார். அதனையடுத்து இப்போது நிவாரணப் பணிகள் முழு வேகத்தில் நடக்கிறது.
மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் தற்காலிக குடியிருப்புகளுக்கு சுனில் பாலிவால் நேரில் சென்றார்.அங்கிருப்பவர்களுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டறிந்தார்.
அப்போது, பிளாஸ்டிக் நாற்காலி, சுடிதார்கள், ஆடைகள் வைக்கும் பெட்டி, தேங்காய் எண்ணெய், முகம் பார்க்கும் கண்ணாடி, பனியன்,தண்ணீர் குடம், பல் பொடி, பேஸ்ட், வத்தல், மல்லி, தேங்காய், புளி, சீரகம், குழந்தை உணவுப் பொருட்கள், சோப்பு, பாமாயில்,சமையலுக்கான பாத்திரங்கள் ஆகியவை தேவைப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்தப் பொருட்களைத் தந்து உதவுவமாறு நன்கொடையாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு சுனில் பாலிவால்வேண்டுகோள் விடுத்துள்ளார்.