சுனாமி: கல்பாக்கத்தில் ராகுல் காந்தி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் சுனாமியால் தாக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகனும், மக்களவைஉறுப்பினருமான ராகுல் காந்தி 2வது நாளாக இன்றும் பார்வையிட்டார்.
ராகுல்காந்தி நேற்று பாண்டிச்சேரி வந்தார். அங்கு சுனாமி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட பின்பு நேற்றிரவு அரவிந்த் கண்மருத்துவமனையில் தங்கினார்.
இன்று காலை 9.30 மணிக்கு பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, கனக செட்டிக்குளம் ஆகிய கடலோர கிராமங்களுக்குசென்று சுனாமி பாதிப்புகளை ராகுல் காந்தி பார்வையிட்டார். பின்னர் கல்பாக்கம் புறப்பட்டார்.
அங்கு சுனாமி அலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட புதுப்பட்டினம் கடலோர கிராமத்துக்கு
தமிழக காங்கிரஸ் தலைவர் வாசனுடன் ராகுல் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்பு உய்யாளிகுப்பம் கிராமத்துக்கு ராகுல் காந்தி சென்றார். அந்தக் கிராமத்துக்க வாகனத்தில் செல்ல முடியாது என்பதால் ராகுல்காந்தி நடந்தே சென்றார். அந்தக் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடியிருப்பில் தங்கியிருந்த மக்களுக்குடன் மண்தரையில் ராகுல் காந்தி உட்கார்ந்தார்.
அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் காரில் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டார். அப்போதுநிருபர்களிடம், மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தேன். அவற்றை நான் மத்திய அரசிடம் தெரிவிப்பேன்.பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
விமான நிலையத்தில் மதிய உணவு சாப்பிட்ட ராகுல் காந்தி, பின்னர் விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.