For Daily Alerts
Just In
திருச்சி: மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 3 பேர் பலி
திருச்சி :
திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் அதில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டியில் டீக்கடை நடத்தி வருபவர் மணிகண்டன் (24), இவர் தனது அக்கா திலகவதியின்திருமணத்திற்காக மாமா குணசேகரன் மற்றும் பள்ளி மாணவன் சின்ராஜ் ஆகியோருடன் மோட்டார் சைக்களிலில் மணப்பாறைக்கு இன்றுகாலை சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சியிலிருந்து பழனிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில்பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Comments
Story first published: Sunday, January 23, 2005, 5:30 [IST]