For Daily Alerts
Just In
போலீஸ் ஏட்டு தீக்குளித்து தற்கொலை
சேலம் :
சேலத்தில் ஆயுதப்படை பிரிவு ஏட்டு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் லைன்மேடு பகுதி ஆயுதப்படைப் பிரிவில் போலீஸ் ஏட்டாக செல்வராஜ் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர்ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந் நிலையில் இன்று இவர் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
இவர் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அப்பகுதியில் வசிக்கும் சிலர் கூறுகின்றனர். ஏற்கனவே இருமுறை இவர் தற்கொலைக்குமுயற்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Sunday, January 23, 2005, 5:30 [IST]