ஜெயலட்சுமிக்கு எதிரான வீடியோ ஆதாரம்!
மதுரை:
ஜெகஜால ஜெயலட்சுமிக்கு எதிரான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கினார்ஏட்டையா கண்ணனின் வழக்கறிஞர்.
20க்கும் மேற்பட்ட போலீஸார் தன்னை பாலியல்ரீதியாக மோசடி செய்ததாக ஜெயலட்சுமி புகார் கூறியுள்ளார்.இந்தப் புகாரை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
ஜெயலட்சுமியுடன் குடித்தனம் நடத்தி, பின்னர் சண்டை போட்டு, அவரை விபச்சார வழக்கில் கைது செய்ய வைத்தஎஸ்பி ராஜசேகரிடம் நேற்று சிபிஐ விசாரித்தது.
இந்த விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று ஜெயலட்சுமியால் குற்றம் சாட்டப்பட்டுள்ளஏட்டு கண்ணன் சார்பில் சில ஆதாரங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து கண்ணனின் வழக்கறிஞர் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலட்சுமி மற்றும் அவரதுகுடும்பத்தினர் செய்த பல்வேறு மோசடிகள் தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் எங்களுக்கு தொடர்ந்து கிடைத்தவண்ணம் உள்ளன. அவற்றை நாங்கள் சேகரித்து வருகிறோம்.
தற்போது ஏட்டு கண்ணனுக்குக் கிடைத்த சில வீடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை சிபிஐ அதிகாரிசிவாஜியிடம் ஒப்படைத்துள்ளோம்.
எங்களிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் மொத்தமாக ஒப்படைக்கும்படி சிபிஐ அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
ஜெயலட்சுமியும், அவரது குடும்பத்தினரும் மோசடிப் பேர்வழிகள் என்பதை நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களும்சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்றார் காந்தி.