கலவையில் நிரந்தரமாய் தங்குகிறார் ஜெயேந்திரர்!
கலவை:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகும் வரை கலவை மடத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் முடிவில்ஜெயேந்திரர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கலவை சங்கர மடத்தில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள ஜெயேந்திரர், இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் வரை காஞ்சிபுரம் சங்கரமடத்திற்குச் செல்லக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
இந் நிலையில் கடந்த 21ம் தேதி குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துவிட்டது போலீஸ். இதனால் ஜெயேந்திரர் மீண்டும் சங்கர மடம்திரும்ப இப்போது எந்தத் தடையும் இல்லை.
ஆனாலும் காஞ்சி மடத்துக்கு வருவதை ஜெயேந்திரர் தவிர்க்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.
மடத்தை தன் வசம் எடுக்கும் தீவிரத்தில் இருக்கும் தமிழக அரசு, ஜெயேந்திரர் அங்கு வருவதை துளியும் விரும்பவில்லை. அவ்வாறு அவர்மடத்துக்குத் திரும்பும்பட்சத்தில் அவர் மீது தமிழக அரசு மிகக் கடுமையான சட்டத்தின் கீழ் (குண்டர் சட்டம் உள்பட) நடவடிக்கைஎடுக்கலாம் என்று கருதப்படுகிறது.
புதிய கட்டடங்கள்:
தமிழக அரசின் இந்த வேகம் குறையும் வரை அவர் காஞ்சி மடத்துக்குத் திரும்ப மாட்டார் என்றே தெரிகிறது. கொலை வழக்கு, ஆடிட்டர்வழக்கு விசாரணைகள் முடிந்து தீர்ப்பு வெளியாகும் வரை தொடர்ந்து கலவை மடத்திலேயே தங்கியிருக்க ஜெயேந்திரர் விரும்புவதாகத்தெரிகிறது.
இதையடுத்து கலவை மடத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் பணிகள் தொடங்கியுள்ளன. முதலில் மதில் சுவரை உயர்த்திக் கட்டும்வேலைகள் தொடங்கியுள்ளன. மேலும் பழைய அறைகளை செப்பனிடும் பணியும் நடக்கிறது.
இதைத் தொடர்ந்து சமையல் அறைகள், தங்குமிடங்கள் உள்ளிட்டவை கலவை பிருந்தாவன வளாகத்தில் கட்டப்படவுள்ளன.
காஞ்சியில் இருந்து வந்த பசுக்கள்:
நவீன வசதிகளுடன் கூடிய அறைகளைக் கட்டும் பணியும் தொடங்க இருக்கிறது. இதைப் பார்க்கையில் சில காலத்துக்கு சங்கர மடத்திற்குஜெயேந்திரர் திருப்ப மாட்டார் என்றே தெரிகிறது.
இதற்கிடையே, இன்று பெளர்னமி தினம் என்பதால் வழக்கமாக ஜெயேந்திரர் கோ பூஜை செய்வார். இதற்காக காஞ்சி சங்கரமடத்திலிருந்துபசு மாடுகள் கலவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.