For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பனுக்கு விஷம் தரப்படவில்லை: ஆய்வு

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் விஷம் வைத்து கொல்லப்படவில்லை என்று ரசாயன பரிசோதனை ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மலைக்கிராமத்தில்வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். வீரப்பன் கும்பலுடன் நடந்த மோதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிரடிப்படை கூறியது.

ஆனால், வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் மயக்க மருந்து கொடுத்து பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டும், பின்னர் விஷம்கொடுத்துக் கொல்லப்பட்டதாக உண்மை கண்டறியும் குழுவினரும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் கூறுகின்றனர்.

இந் நிலையில் வீரப்பன் விஷம் வைத்துக் கொல்லப்படவில்லை என்று ரசாயன பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.வீரப்பன் உயிருடன் இருக்கும்போதே அவனது உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே அவனும்,கூட்டாளிகளும் இறந்துள்ளதாக தடயவியல் பிரிவின் ரசாயனப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

வீரப்பன் மற்றும் கூட்டாளிகளின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட குண்டுகள், குடல் பகுதி ஆகியவற்றில் நடந்த ரசாயனப் பசோதனையில்இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X