For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அய்யர் ஜாமீன் மனு 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Sundaresa Ayyarஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சங்கரமடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர்மற்றும் கூலிக் கும்பலைச் சேர்ந்த கதிரவன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் துரைசாமி, ஆடிட்டர்ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஜெயேந்திரர், அப்பு, கதிரவன், சுந்தரேச அய்யர்ஆகியோர் கூட்டு சதி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதுதொடர்பாக பலர் சாட்சியம் அளித்துள்ளனர் என்றார்.

இதையடுத்து மனுக்கள் மீதான விசாரணை இன்று முடிவடைந்து. இதையடுத்து தீர்ப்பை வரும் 31ம் தேதியன்று அறிவிப்பதாகநீதிபதி அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X