ஜெயேந்திரர்: மனித உரிமை ஆணையத்துக்கு தடை
சென்னை:
போலீஸ் காவலில் இருந்தபோது ஜெயேந்திரர் கொடுத்த வாக்குமூலத்தின் வீடியோ தொலைக்காட்சிகளுக்கு லீக் செய்யப்பட்டதுமற்றும் விஜயேந்திரர் கைது செய்யப்பட்ட விதம் ஆகியவை குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜெயேந்திரர் ஜனவரி 10ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து உடனடியாக விஜயேந்திரர் கைதுசெய்யப்பட்டார். இதனால் தமிழக அரசு பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுவதாகக் கூறி தேசிய மனித உரிமை ஆணையத்தில்புகார் அளிக்கப்பட்டது.
மேலும் போலீஸ் காவலில் இருந்து ஜெயேந்திரர், இளையவருக்கு எதிராகப் பேசிய பகுதி அடங்கிய வீடியோ காட்சிகள் தனியார்தொலைக்காட்சிகளுக்கு லீக் செய்யப்பட்டன. இதை போலீசார் தான் வழங்கியதாகவும் மனித உரிமைக் கமிஷனிடம் புகார்தரப்பட்டது.
இந்தப் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் காவல்துறை டிஜிபிக்கும் தேசியமனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவை நீதிபதி சிவசுப்பிரமணியம் இன்று விசாரித்தார். அப்போது அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி, நீதிமன்றத்தில் இந்தக் கொலை வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந் நியிைல் இந்த விவகாரத்தில் தலையிட மனிதஉரிமை ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை. இந்தத் தலையீட்டால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதி, மனித உரிமை ஆணையத்தின் நோட்டீசுக்கு இரு வார கால இடைக்காலத் தடை விதித்தார்.
மேலும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.போலீஸ் காவலில் இருந்தபோது ஜெயேந்திரர் கொடுத்த வாக்குமூலத்தின் வீடியோ தொலைக்காட்சிகளுக்கு லீக் செய்யப்பட்டதுமற்றும் விஜயேந்திரர் கைது செய்யப்பட்ட விதம் ஆகியவை குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜெயேந்திரர் ஜனவரி 10ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து உடனடியாக விஜயேந்திரர் கைதுசெய்யப்பட்டார். இதனால் தமிழக அரசு பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுவதாகக் கூறி தேசிய மனித உரிமை ஆணையத்தில்புகார் அளிக்கப்பட்டது.
மேலும் போலீஸ் காவலில் இருந்து ஜெயேந்திரர், இளையவருக்கு எதிராகப் பேசிய பகுதி அடங்கிய வீடியோ காட்சிகள் தனியார்தொலைக்காட்சிகளுக்கு லீக் செய்யப்பட்டன. இதை போலீசார் தான் வழங்கியதாகவும் மனித உரிமைக் கமிஷனிடம் புகார்தரப்பட்டது.
இந்தப் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் காவல்துறை டிஜிபிக்கும் தேசியமனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவை நீதிபதி சிவசுப்பிரமணியம் இன்று விசாரித்தார். அப்போது அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி, நீதிமன்றத்தில் இந்தக் கொலை வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந் நியிைல் இந்த விவகாரத்தில் தலையிட மனிதஉரிமை ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை. இந்தத் தலையீட்டால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதி, மனித உரிமை ஆணையத்தின் நோட்டீசுக்கு இரு வார கால இடைக்காலத் தடை விதித்தார்.
மேலும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.