பிரதமர் வீட்டில் வெடித்த துப்பாக்கி!
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் துப்பாக்கி வெடித்ததில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
பிரதமர் வீடு மிகுந்த பாதுகாப்பு உடைய இடமாகும். இங்கு திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதைக் கேட்டுஅதிர்ச்சியடைந்த பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கி வெடித்த இடத்திற்கு விரைந்தனர். அங்கு பாதுகாப்புப் படை வீரர் எஸ்.பி.சிங்என்பவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
உடனே அவர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி வெடித்தது எப்படி என்பது குறித்து எஸ்.பி. சிங் உட்பட பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்டவிசாரணையில் துப்பாக்கி வெடித்தது தற்செயலான சம்பவம் என்பது தெரியவந்தது.
பலத்த பாதுகாப்புடன் இருக்கும் பிரதமர் வீட்டில் துப்பாக்கி வெடித்தது அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக்கிளப்பியுள்ளது.