For Quick Alerts
For Daily Alerts
Just In
சுனாமி: புதுவையில் நினைவு சின்னம்
பாண்டிச்சேரி:
புதுவையில் குடியரசு தின விழா எளிமையாக நடந்தது. விழாவுக்குப் பின்னர் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம்பேசுகையில், சுனாமியால் உயிர் நீத்தவர்கள் நினைவாக புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் அரசு சார்பில் நினைவுச்சின்னங்கள் அமைக்கப்படும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் அல்லாத 7,000 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 12,000 பேருக்குஉதவிகள் வழங்கப்படவுள்ளன என்றார் ரங்கசாமி.
சுனாமி சோகம் காரணமாக புதுவை குடியரசு தின விழா நிகழ்ச்சிகளில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு மிகவும் எளிமையாகவிழா நடத்தப்பட்டது.
Comments
chennai tamil nadu news summon kanchi sankarachariyar vijayendrar appu tn seshan kanchi mutt ravi subramaniam
Story first published: Thursday, January 27, 2005, 5:30 [IST]