For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயேந்திரருக்காக 108 கோயில்களில் யாகம்

By Staff
Google Oneindia Tamil News

கலவை:

Jeyandrarவழக்குகளில் இருந்து ஜெயேந்திரர் விடுபட நாடு முழுவதும் 108 கோயில்களில் யாகம் நடத்தப்படும் என்று விசாகப்பட்டினம்பாலநாகம்மை மடாதிபதி வீர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.

கலவையில் ஜெயேந்திரரை வீர சரஸ்வதி சுவாமிகள் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஒரு தவறும் இழைக்காத ஜெயேந்திரர் மீது தமிழக அரசு பல பொய் வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. இதன் மூலம் சங்கரமடத்தையும், இந்து மதத்தையும் அழிக்க நினைக்கிறது. இதை இந்து மக்கள் ஏற்க மாட்டார்கள்.

சங்கர மடம் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதை அழிப்பதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா எதை சாதிக்கப் போகிறார்என்பது தெரியவில்லை. அவரின் இந்துப் போக்கு கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதாவுக்கு மனமாற்றம் ஏற்படும் வகையில்ஆண்டவன் அவருக்கு நல்ல அறிவை வழங்க வேண்டும்.

ஜெயேந்திரர் நலமுடன் இருக்கவும், அவர் மீதான வழக்குகளிலிருந்து விடுவிக்கப்படவும் பாலநாகம்மை கோயில் மடம் சார்பாகநாடு முழுவதும் உள்ள 108 கோயில்களில் யாகம் நடத்தப்படும். இந்த யாகத்தில் ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும்ஜெயேந்திரரின் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X