For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிபிஐ: தமிழ்ப் பெண் அதிகாரிக்கு ஜனாதிபதி விருது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சிபிஐயின் பொருளாதார குற்றப்பிரிவு இணை இயக்குனராகப் பணியாற்றும் அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு குடியரசுத் தலைவர்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

1980ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் மதுரை, சேலம் ஆகிய இடங்களில் உதவி போலீஸ்கமிஷனராகவும், நீலகிரியில் எஸ்.பியாகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் துணை போலீஸ் ஐ.ஜியாக வேலூரிலும் மற்றும் பலஉயர் பொறுப்புகளிலும் பணியாற்றியிருக்கிறார்.

இவருக்கு கடந்த 1995ம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை 1996ம் ஆண்டு நடந்த விழாவில்முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

தற்போது டெல்லியில் சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு இணை இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரம் பணியாற்றுகிறார்.முத்திரைத்தாள் மோசடி வழக்கை இவர்தான் விசாரித்து வருகிறார்.

இந் நிலையில் குடியரசு தினத்தையொட்டி அர்ச்சனாவிற்கு 2வது முறையாக குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது கணவரும் தமிழக ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான ராமசுந்தரம் மத்திய வர்த்தகத் துறையில் இணை செயலாளராகப்பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X