ஜெயேந்திரர் வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி?
சென்னை:
திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயரட்சகன் செங்கல்பட்டு முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீதான கொலை வழக்கை இவர் விசாரிப்பார் என்று தெரிகிறது.
தமிழகத்தில் பல நீதிமன்றங்களின் நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல்வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஈரோடு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம், வேலூர் முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார். சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேணுகோபால் சேலம் இரண்டாவது விரைவு நீதிமன்றநீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை தலைமை நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராமுலு, கோவை 3வது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் 2வதுவிரைவு நீதிமன்ற நீதிபதி முகமது அலி, சேலம் முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜோனதன் ஞானையா, திருச்சி 2வது விரைவு நீதிமன்ற நீதிபதியகாவும்,வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜகோபால், விருதுநகர் விரைவு நீதிமன்ற நீதிபதியாகவும்நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி 2வது விரைவு நீதிமன்ற நீதிபதி மேகநாதன், திருச்சி முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாகவும், திண்டுக்கல் தலைமைகுற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயரட்சகன் செங்கல்பட்டு முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றுகூறப்பட்டுள்ளது.
இதில் செங்கல்பட்டு முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயரட்சகன்தான், ஜெயேந்திரர் மற்றும்விஜயேந்திரர் மீதான கொலை வழக்குகளை விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.