For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குண்டர் சட்ட கைது: கலெக்டரிடம் ரகு, அய்யர் மனு

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Raghu குண்டர் சட்டத்தில் தான் கைது செய்ததை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விஜயேந்திரரின் தம்பி ரகு, காஞ்சி மடத்தின்முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர் ஆகியோர் மனு அனுப்பியுள்ளார்.

சங்கரராமன் கொலை வழக்கில் ரகு, சுந்தரேச அய்யர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு கடந்த மாதம் 22ம் தேதி குண்டர்சட்டமும் அவர்கள் மீது பாய்ந்தது. இதனால் இவர்கள் இருவரும் ஜாமீனில் வெளி வர முடியாது.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான மறு ஆய்வுக் குழு இவர்கள் மீதான வழக்குகளை ஆராய்ந்து, குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்தது சரியல்ல என்று கூறினால் தான் இவர்களால் வெளிவர முடியும்.

குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் கைதிற்கு எதிரான தங்களது ஆட்சேபணையை 12 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும். அந்த வகையில் ரகுவும் அய்யரும் மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேசனிடம் தங்களது ஆட்சேபணை மனுவை அளித்தனர்.

ரகுவின் மனுவை அவரது வழக்கறிஞர் ரேவதி வாசுதேவன், வெங்கடேசனிடம் அளித்தார். சுந்தரேச அய்யர் தனது மனுவைத் தபாலில்அளித்தார்.

இதற்கிடையே ரஜினி, மாட்டு பாஸ்கர், அனில் ஆகியோர் தங்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியல் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

மொத்தம் 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X