For Quick Alerts
For Daily Alerts
Just In
விஜயேந்திரருடன் வெங்கையா சந்திப்பு
சென்னை:
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஜயேந்திரரை முன்னாள் பாஜக தலைவர் வெங்கைய நாயுடு சந்தித்துப் பேசினார்.
இச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் நாயுடு பேசுகையில், கடந்த முறை விஜயேந்திரரை சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கப்பட்டபோது,அவரை போலீஸ் காவலில் எடுத்துச் சென்று விட்டனர். எனவே இப்போது வந்து பார்த்தேன்.
உடல் நலம்குறித்து விசாரித்தேன். சிறையில் பூஜைகள் செய்ய அனுமதி தரப்படுவதாக கூறினார். விரைவில் நீதி வெளியே வரும் என்றுநம்பிக்கை தெவித்தார்.
சிறையில் நல்ல, ஆரோக்கியமான உணவு தரப்படுகிறதா என்றும் விசாரித்தேன் என்றார் வெங்கையா.
அவருடன் மாநில பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோரும் விஜயேந்திரரைசந்தித்தனர்.
Comments
Story first published: Wednesday, February 2, 2005, 5:30 [IST]