For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குண்டாஸ்: அய்யர் மனு விசாரணைக்கு ஏற்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Sunderasa Ayyarr தன்னைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது சட்ட விரோதமானது என்று கூறி காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர்தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ரகு, சுந்தரேச அய்யர், கதிரவன் உட்பட 10 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அய்யரும், கதிரவனும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

ஆனால் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் ஜாமீனில் விடுவிக்க முடியாது என்று நீதிபதி முருகேசன் கடந்த 31ம்தேதி தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து தன்னை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யது சட்டவிரோதமானது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுந்தரேசஅய்யர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி கற்பகவிநாயகம் மற்றும் நீதிபதி மாசிலாமணி ஆகியோர் அடங்கிய டிவிஷன்இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அப்போது இது தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 4வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

ரஜினி, மாட்டு பாஸ்கர், அனில் ஆகியோரும் தங்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்ஹேபியல் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X