For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்பு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Appu சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளகூலிப்படைத் தலைவன் அப்பு மற்றும் போலி குற்றவாளி தில் பாண்டியன் ஆகியஇருவரும் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதில் அப்பு மீது குண்டர் சட்டம் பாய்வது இது இரண்டாவது முறையாகும்.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அவரது தம்பி ரகு, காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர்உட்பட மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜெயேந்திரர் மட்டும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளர்.

இந்த 26 பேரில் ரகு, சுந்தரேச அய்யர், கதிரவன், சின்னா, அம்பிகாபதி, மாட்டு பாஸ்கர், அனில், மீனாட்சிசுந்தரம், குமார், ஆனந்தகுமார்ஆகிய 10 பேர் மீது குண்டர் சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் அப்பு, தில் பாண்டியன் ஆகியோர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை காஞ்சிபுரம் மாவட்டஆட்சியர் வெங்கடேசன் வெளியிட்டார். இதையடுத்து சங்கரராமன் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைதானவர்களின்எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக அப்புவை ஜெயேந்திரருக்கு எதிராக அப்ரூவராக்க அரசுத் தரப்பு முயன்றது. ஆனால், அப்பு அதற்கு முன் வராததால் அவன் மீதுகுண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளதாகத் தெரிகிறது.

அப்பு மற்றும் தில் பாண்டியன் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நாளை மறுநாள் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

தற்போது இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் அடுத்த ஒரு வருடத்துக்கு இருவரும் ஜாமீனில் கூட வெளியே வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் கைதான மேலும் சிலர் மீது குண்டர் சட்டம் பாயலாம் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X